அண்ணா மாயை!
தமிழர்கள் மீதான பிறவி இழிவைத் துடைத்தழிப்பதற்காகத் தொடங்கப்பட்ட திராவிட இயக்கம் இடையிலேயே பிளவுபட்டு, திசைமாறி, இறுதியில் ஆட்சியை மட்டும் கைப்பற்றி – இன்று ஒரு தேக்க நிலைக்கு வந்துவிட்டது. இதற்கான மூல காரணமாக அரசியல் மோகத்தையும்; அதற்கு வித்திட்டவராக அண்ணாவையும் சொல்ல முடியும். அண்ணா நூற்றாண்டிற்கு ‘இந்து’ நாளேடு சிறப்பிதழ் வெளியிட்டதை, இவ்வரலாற்றுத் துரோகத்திற்கான சான்றாகக் கொள்ளலாம். ஓராண்டு நடைபெற்ற இந்நூற்றாண்டு விழா, தி.மு.க. என்ற ஆளும் கட்சியின் கொண்டாட்டமாகவே சுருங்கிப் போனதற்கும் அதுதான் காரணம்.
தந்தை பெரியார் முன்னிறுத்திய கடவுள் மறுப்பை கல்வெட்டாக நாடெங்கும் வைத்தவர்கள், அதற்கு இணையாக அவர் முன்வைத்த ஜாதி, மத, அரசியல் மறுப்பை மட்டும் திட்டமிட்டு மறைத்து விட்டனர். சிந்து சமவெளித் தமிழன் மீது இழிவைத் திணித்தது இந்து மதம். இதற்கு எதிர்வினையாற்றத் தொடங்கப்பட்ட இயக்கம், அதிகார ஆட்சி வெறியில் இழிவையும் இசைவுடன் ஏற்றுக் கொண்டது. அதன் விளைவு, ‘தமிழன்’ என்பது அரசியல் அடையாளமாகவும், ‘ஜாதி’ என்பது சமூக, பண்பாட்டு அடையாளமாகவும் – பெருமையும் இழிவும் இரண்டறக் கலந்துவிட்டது. இம்முரண்பாட்டை அவமானமாக எண்ணி, அழித்தொழிக்க எவரும் தயாரில்லை.
திராவிடன் என்ற இன அடையாளத்துடன் விடுதலைக்காகப் போராடுவதற்கு மாறாக, திராவிட நாட்டின் ஆரியர்களையும் முன்னேற்றும் கழகம் என திரித்து, வாக்குகளை மட்டுமே குறிவைத்து செயல்பட்டதால் ஏற்பட்ட ஆபத்தை இன்று அவர்களே அனுபவிக்கின்றனர். அண்ணா நூற்றாண்டைக் கொண்டாடும் கட்சிக்கு எதிரி, அண்ணா பெயரிலேயே அமைந்துள்ள – அவருடைய நூற்றாண்டைக் கொண்டாட மறுக்கும் – ஆரியத் தலைமையிலான கட்சிதானே! இந்த முரண்நகைக்காக ‘அண்ணாயிஸ்டு’கள் வெட்கப்படுவதில்லை. தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்ததால் ஏற்பட்ட நிரந்தரப் பக்க விளைவு இது.
‘தி.மு.க.வை அண்ணா தோற்றுவிக்காமல் இருந்திருந்தால், ஆட்சி அதிகாரம் தமிழனிடம் வந்திருக்குமா?’ என்ற பட்டிமன்றக் கேள்விகள் அறிவின்பாற் பட்டவையல்ல; அப்பழுக்கற்ற சுயநல அரசியலின் பாற்பட்டவை. சேர, சோழ, பாண்டியர்கள் ஆட்சிக் கட்டிலில் இருந்திடவில்லையா? அன்று தொடக்கம் இன்றுவரையிலும் தமிழன் சூத்திரப் பட்டத்தை சுமந்து கொண்டுதானே ‘அதிகாரத்தில்’ திளைக்கிறான். அய்ந்து முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்தும் தமிழக முதல்வரால் தன்/இனத்தின் சூத்திரப் பட்டத்தை அழிக்க முடிந்ததா? இன்னும் நூறாண்டுகளுக்கு ஆட்சியில் இருந்தால்கூட, தமிழர்கள் மீதான இழிவை அகற்றிவிட முடியாது. இந்த இன இழிவைச் சொல்லி, அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்குதான் தேர்தல் அரசியல் பயன்படும்.
தமிழனின் ஆட்சி என்பதற்காகப் பெருமை கொள்ள என்ன இருக்கிறது? முப்பது கல் தொலைவில் இருக்கும் ஈழத்தில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டபோதும் தமிழனின் அதிகாரத்தால் என்ன செய்ய முடிந்தது – சில மணி நேரம் பட்டினி கிடந்து, மண்டியிட்டதைத் தவிர? போருக்குப் பிறகும் நிராயுபாணிகளாக இருக்கும் மக்கள் வதைபடுவதைத் தடுக்க – கடிதம் எழுதி, தீர்மானங்களை முன்மொழிந்து, கோரிக்கை மனுக்களை அளிப்பதற்குப் பெயர் அதிகாரம் அல்ல; அடிமைத்தனம். சட்டமன்றம் தவிர்த்த (சமூகம்/நீதிமன்றம்/அரசு எந்திரம்/ஊடகம்) பிற அதிகாரங்கள் அனைத்தும் இன்றளவும் பார்ப்பனர்களிடம்தானே இருக்கிறது.
இங்கிருக்கும் சேரித் தமிழனையாவது வன்கொடுமைகளில் இருந்து காப்பாற்ற, ஆட்சி அதிகாரம் பயன்படுகிறதா? உடனே, இலவச நலத் திட்டங்கள் பட்டியலிடப்படும். வாக்கு அறுவடைக்காக, அதை காங்கிரஸ்/பா.ஜ.க. ஆட்சிகள்கூட செய்து தொலைக்கும். செந்தமிழ் நாடெங்கும் ‘உத்தப்புர சுவர்கள்’ ஊரையும் சேரியையும் பிரித்து நிற்கிறதே! இச்சமூகக் கொடுமைகளை மறைப்பதற்குதான் அண்ணாவின் அரசியல் பயன்படுகிறது. அது ஒருபோதும் சமூக – பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்தி தமிழர்களை உய்விக்காது.
நாற்பதாண்டு கால திராவிட ஆட்சியில் ஊழலும், ஜாதியும், வாரிசு அரசியலும் போட்டிப் போட்டுக் கொண்டு ஒன்றையொன்று விஞ்சி நிற்கின்றன. வேட்பாளர் தேர்வு முதல் கட்சி நிருவாகம், ஆட்சி நிருவாகம் வரை ஜாதி அடிப்படையில் பங்கு போட்டுக் கொண்டு, மறுபுறம் எந்தக் கூச்சமுமின்றி தமிழ் நாட்டையே சமத்துவபுரமாக்கும் லட்சியத்தை அறிவிப்பது – கடைந்தெடுத்த அரசியல் கயமையல்லவா? சமூக – பண்பாட்டு ரீதியாக சமத்துவத்தை எய்தும் வரை, தமிழன் சுயமரியாதையுடன் வாழவே முடியாது. அதற்கு வக்கற்ற தமிழன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதற்குதான் அண்ணா மாயை!
-தலித் முரசு தலையங்கம்


தலைவர் கொளத்தூர் மணீ அவர்களூடன் நாணூம்…
மும்பை இல் நடந்த தலைவர் பெரியார் பிறந்த நாள் வீழாயீல்
தலைவர் கொளத்தூர் மணீ அவர்களூடன் நாணூம்…





தியாகதீபம் லெப் கேணல் திலீபனின் இருபத்திரண்டாம் ஆண்டு நினைவில்..

படியுங்கள்..பரப்புங்கள்
இணையம் கற்போம்

இந்த நூல் 112 பக்கம் அளவுடையது.விலை உருவா 100.00
தேவைப்படுவோர் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.அல்லது 300.00 பணம் பணவிடை(M.O.) அனுப்புவதுடன் தெளிவான முகவரியும் அனுப்புங்கள்.தனித்தூதில் எங்கள் செலவில் அனுப்பிவைப்போம்.
தொடர்புக்கு
செல்பேசி எண் : + 91 9442029053
மின்னஞ்சல் : muelangovan@gmail.com
வயல்வெளிப் பதிப்பகம்
இடைக்கட்டு,உள்கோட்டை(அஞ்சல்),
கங்கைகொண்ட சோழபுரம்(வழி),
அரியலூர்(மாவட்டம்),தமிழ்நாடு.
612 901.
சுதந்திரம் யாருக்கு..?
சுதந்திரம் யாருக்கு..?
…………………………..
மூவேந்தர் கொடி முதல்..
மூவண்ண கொடி வரை..
ஏற்றப்படுவது எந்த நுலால்..
பூணூலால்..
-கவிஞர் இன்குலாப்

……………………………………………………………………………………
இந்திய தேசியத்தை உடைத்தெறீவொம்..
தமிழ் தேசியத்தை கட்டமைப்பொம்..
……………………………………………………………………………………….

………………………………………………………………………………………………….
மும்பை தமிழர்களின் அவலம்…….
கரம் நீட்டுங்கள்… கண்ணீரைத் துடையுங்கள்
புதிய ஆண்டு நம்பிக்கையைக் கொண்டு வரும் என்பதுதான் அனைவரின்
எதிர்ப்பார்ப்பாகும். விடைபெற்ற ஆண்டு விட்டுச் சென்ற காயங்கள் கூட ஆறவில்லை. 6-1-2009 ஆம் நாள் இரவு 8:40 மணியளவில், செம்பூர் அணுசக்திநகர் அருகில் உள்ள சீத்தா கேம்ப் குடிசைப் பகுதி மக்கள், புத்தாண்டு தொடக்கத்தில் புத்தாடைகளோடு ஒருவரை ஒருவர் வாழ்த்துப் பரிமாறிக் கொண்டிருந்த மகிழ்ச்சியான அந்த நிமிடங்களில்தான், இடி விழுந்தது போல் யாரும் எதிர்பாராத கோர நிகழ்வு நடந்ததது. சீத்தாகேம்ப் குடிசைவாசிகள் மீது அப்படி என்னதான் கோபமோ.. கண் இமைக்கும் நேரத்தில் கண் எதிரில் குடிசைகள் எல்லாம் தீப்பற்றி எரிய தொடங்கியது. நெருப்பின் கோபம் தணிந்த போது சீத்தாகேம்ப் பகுதி முழுவதும் சாம்பல் காடாக மாறியிருந்தது. 
உடைமைகளை மறந்து, உயிர் பிழைத்தால் போதும் என்று கதறிக் கொண்டு ஓடிய மக்கள்.. சுட்ட நெருப்பின் வலியில் துடித்த குழந்தைகள்..எரிந்து சாம்பலாகிப்போன விலைமதிப்புள்ள பொருட்கள்,, கரிக்கட்டையாய் உருமாறிப்போன மனித உடல்கள்.. வாழ்வின் மொத்த சேமிப்பையும் இழந்த நிலை, மரண ஓலம்,எங்கும் மரண ஓலம்.

இன்று.. தங்கள் அன்பிற்குரியவர்களை பறிகொடுத்துவிட்டு, அனாதைகளாய் நிற்கும் குழந்தைகள்.. கணவனை இழந்து நிற்கும் பெண்கள்.. பிள்ளைகளை இழந்து நிற்கும் பெற்றோர்கள், கல்மனதையும் கரைய வைக்கும் இந்தக் கண்ணீர்க் காட்சிகள் உள்ளத்தை உலுக்குகிறது.


“என் ஒரே மகளின் திருமணத்திற்காக, குருவி கூடுகட்டுவது போல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த பணமெல்லாம் நொடிப்பொழுதில் எரிந்து சாம்பலாகிவிட்டதே, இனி நான் என்ன செய்வேன்? ”என்று அழுது நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுது புலம்பும்ஏழை விதைவைத் தாயின் இயலாமையே ஒட்டுமொத்த சீத்தாகேம்ப் குடிசைவாசிகளின் குரலாக ஒலிக்கிறது.
விழுப்புரம், கடலூர் பகுதிலிருந்து பிழைக்க வந்த கூலித் தொழிலாளத் தமிழர்கள் அதிகமாக வாழும் இந்த பகுதி இன்று மயானம் போல் காட்சியளிக்கிறது. பணம், பொருள், உயிர் என்று அனைத்தையும் இழந்து பரிதாப நிலையில் கைபிசைந்து நிற்கும் இந்த மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது.
சீத்தாகேம்ப் பகுதி குடிசைவாசிகளின் இந்த துயரம் நிறைந்த கண்ணீர் வாழ்க்கையைப் படிக்கும் தங்களை போன்ற நல்ல உள்ளம் படைத்த பெருமான்களிடம் நாங்கள் கரம் குவித்து கண்ணீரோடு வேண்டிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

“எங்களை கைதூக்கி விடுங்கள்,எங்கள் கண்ணீர துடைக்க உதவிகரம் நீட்டுங்கள்” என்பதுதான் எங்களின் வேண்டுகோள்.

மா.கதிரவன் – +91 9321 4544 25, மின்னஞ்சல்:khathiravan@gmail.com
வங்கி கணக்கில் உடனடியாக செலுத்த A/c 2112155 00000 7349, M. Khathiravan, Mumbai. Chembur Branch, The Karur Vysya Bank.



