விடுதலை புலிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்படவில்லை .. -மும்பையில் பழ.நெடுமாறன் பேச்சு

விடுதலை புலிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்படவில்லை ..
-மும்பையில் பழ.நெடுமாறன் பேச்சு
……………………………………………………………..

மும்பை சியன் கொலிவடவில் தமிழர் பாதுகாப்பு குழு சார்பில் நடந்த ஐநா சபையால் போர் குற்றவாளியாக அறிவிக்கபட்ட ராஜபக்ஷேயை கைது செய்ய கோரி மாபெரும் பொது கூட்டத்தில் பழ.நெடுமாறன் பேசினார் :

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டு 21 நூற்றாண்டில் மிக பெரிய இனப்படுகொலையாகும் ..இந்த இனபடுகொலைக்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை இந்தியாவும் ,சீனாவும் பாதுகாத்து வருகின்றனர் .இலங்கையில் முகாம்களில் அடைத்து வைக்கபட்டுள்ள தமிழர்களை உடனே அவர்களது சொந்த ஊரில் குடியமர்த்த வேண்டும் இலங்கையில் விடுதலை புலிகள் இருந்தவரை சீனாவால் நுழைய முடியவில்லை ,ஆனால்

இந்தியாவின் அச்சுறுத்தலுக்க சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் இருந்து வருகிறது ,விடுதலை புலிகள் ஒருபோதும் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டுதில்லை ஆனால் முன்னால்
பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் நாட்டின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டும் தீவிரவாதத்தை கருத்தில் கொண்டும் புலிகளுக்கு எதிரான போக்கை இந்தியா கடைபிடித்தாக தெரிவித்துள்ளார் ,ஆங்கிலேயர்களால் விடுதலைக்கு போராடிய சுபாஷ் சந்திரபோஸ் ,பாகத் சிங் போன்றவர்கள் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டனர் இப்போது இனவிடுதலைக்க போராடும் விடுதலை புலிகளை தீவிரவாதிகள் என்று இந்தியா கூறிவருகிறது

உலக நாடுகள் ஒன்றிணைந்து ராஜபக்ஷே மீது நடவடிக்கை எடுக்க தமிழர்கள் அனைவரும் வலியுறுத்த வேண்டும் இலங்கையில் தமிழர்களை கொத்து,கொத்தாக கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை ஐ நா போர் குற்றவாளியாக அறிவித்துள்ளது .தமிழர்கள் மீது ஈவு ,இரக்கமின்றி இனவெறி தாக்குதல் நடத்திய ராஜபக்ஷேவை சர்வ தேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்துவதற்காக இந்த கூட்டம் கூட்டபட்டுளது .ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க ஒவ்வொரு தமிழனும் எழ வேண்டும் .

மேலும் முள்வேலி முகாமில் சிக்கி தவிக்கும் பெண்கள் ,குழந்தைகள் மற்றும் நம் தமிழ் இனத்தை மீட்டு எடுக்க ஐ நா படை தனது குழுவினை அனுப்பி நடவடிக்கை எடுக்கவேண்டும் .இதுவே நம்முடைய முக்கிய கோரிகையகையாக இருக்க வேண்டும் ” என்று பேசினார் ..இக்கூட்டத்தில் உலக தமிழர் பேரமைப்பு ,தமிழர் நட்பு கழகம் ஆகிய அமைப்புகள் கலந்துகொண்டனர்

பற்றி கதிரவன்
பத்திரிகையாளன், சமூக ஆர்வலர், மும்பை பெதிக பொறுப்பாளர்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.