மும்பை யில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பு
ஜூன் 17, 2011 கருத்துத் தெரிவிக்கவும்
மும்பை யில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பு
………………………………………………………….

இலங்கையில் கடந்த அறுபது ஆண்டுகாலமாக தமிழர்கள் அனைத்து வகையிலும் மிகப்பெரிய ஒதுக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் சந்தித்து வருகிறார்கள். அதில் முதல் 30 ஆண்டுகள் அறவழிப்போராட்டாம் தந்தை செல்வா தலைமையில் முன்னெடுக்கப்பட்டு. அகிம்சை முறையில் போராடி வந்த தமிழ் மக்கள் சிங்கள பேரினவாத அரசால் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். தொடர் ஒடுக்குமுறையால் அங்கு உள்ள தமிழ் மக்கள் இரண்டு முடிவுக்கு வரவேண்டியதாயிற்று, ஒன்று இனியும் இலங்கையை ஆளும் சிங்கள பேரினவாத அரசின் கீழ் ஒரு தீர்வையும் எட்ட இயலாது, மற்றொன்று ஆயுதம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கும் அரசுடன் அமைதி வழியில் போராட இயலாது.

1983 கறுப்பு யூலை படுகொலைக்குப் பிறகு இளைஞர்கள் தனிஈழக் கோரிக்கையுடன் ஆயுதம் ஏந்தி போராடத் தொடங்குகிறார்கள். இதன் தொடர்ச்சியாக போராளிகள் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒடுக்குமுறை அரசிற்கு எதிராக ஆயுதம் கொண்டு பல வெற்றிகளை குவித்தனர். இந்நிலையில் 2001ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு உலக அரசியல் அரங்கில் ஏற்பட்ட மாற்றம் உலகில் ஆயுதம் கொண்டு போராடும் அனைத்து அமைப்புகளுக்கும் பயங்கரவாத முத்திரைக் குத்தப்படுகிறது, அதில் விடுதலைப் புலிகள் அமைப்பும் பயங்கரவாதிகள் என்று முத்திரைக் குத்தப்பட்டு தடைசெய்யப்படுகிறது.

அதன் பிறகு புலிகள் அமைப்பு பேச்சுவார்த்தைக்கு அமர்கிறது, ஆயினும் சிங்கள பேரினிவாத அரசு எந்த ஒரு தீர்வையும் அடைவதற்கு தயாரக இல்லை. இறுதியில் 2004ஆம் ஆண்டு இலங்கை அரசு பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு தாக்குதலை தொடங்கியது. இடைப்பட்ட காலக்கட்டத்தில் அரச கட்டுப்பாட்டில் இருந்த தமிழர் தாயக பகுதிகளில் இராணுவத்தை நிலைப்படுத்தி அதன் துனைக்கொண்டு சிங்களர்களை குடியமர்த்தினர். புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீது பொருளாதாரத் தடையை நிறுவுகிறது. இந்நிலையில் உலக வல்லாதிக்க நாடுகளின் ஆதரவுகளைத் திரட்டி அவர்களின் நேரடி உதவியோடும் இந்திய அரசின் முழுப் பங்களிப்போடும் “பயங்கரவாத்த்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் தனது இன அழிப்புப் போரை தொடங்கியது சிங்கள பேரினவாத அரசு. அங்கு நடக்கும் படுகொலைகள் உலகத்தார் கண்களுக்கு தெரியாதவன்னம் சர்வதேச ஊடகங்களையும், தன்னார்வ அமைப்புகளையும் போர்ப்பகுதியைவிட்டு வெளியேற்றியது.

இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு பல்முனைத் தாக்குதல்களை தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு தொடுத்த்து, இதற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பை நல்கியதுடன் இரசாயன ஆயுதங்கள் கொடுத்து, உளவு வேலைகளைப் பார்த்து மிகப்பெரிய அழிவுக்கு காரணமாக நின்றது. இப்படி இலங்கை அரசு இந்தியா மற்றும் உலக நாடுகளுடன் இனைந்து நடத்திய இன அழிப்பு போரில் 4 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். புலிகள் தங்கள் ஆயுதங்களை மவுனிக்க செய்கிறோம் என்று கூறிய பிறகு மே 17, 18ல் மட்டும் 50,000த்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இப்படி மிகப் பெரிய இன அழிவை ஏற்படுத்திய போர் முடிவுக்கு வந்த பின்னாளில் எஞ்சிய 3லட்சத்திற்கும் மக்களை எந்தவொரு அடிப்படை வசதிகளும் அற்ற முல்வேளி முகாம்களுக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்த்து. மேலும் அங்கு அடைபட்டுகிடந்த பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். இளைஞர்கள் கட்த்தப்பட்டு கொல்லப்பட்டனர்.

இத்தனை அநியாயங்களையும் கைகட்டி வேடிக்கை பார்த்து வந்த சர்வதேச சமூகம், இன்று திரும்பி பார்க்கத் தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில் ஐ.நா. சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்க் குழு போர்க்குற்றம் குறித்தான ஆய்வை மேற்கொண்டு பல சாட்சியங்களை சந்தித்து தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மிக்க் கொடூரமான போர்க்குற்றங்கள் நடபெற்றுள்ளது என்று ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. அது இன்றியும் அயர்லாந்து நாட்டில் டப்லின் மாகானத்தில் கூடிய தீர்ப்பாயம் அங்கு இனப்படுகொலை நடந்ததற்கான அனைத்து கூறுகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த சூழலில் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை மற்றும் டப்லின் தீர்ப்பாயத்தின் அடிப்படையிலும் இலங்கையில் ஒரு நீதி விசாரனை நட்த்தப்பட வேண்டும் என்பதை முன்னிறுத்தி இன்று நாம் செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்த செயல்பாடு என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்காக மட்டுமின்றி, இது போன்று உலகில் எந்த ஒரு பகுதியிலும் இனப்படுகொலை நடக்காதவன்னம் தடுப்பதற்காகவும் இருக்க வேண்டும்.
இதனை நோக்காக கொண்டு ஒரு தொடர்ச்சியான செயல்பாடுகளை மேற்கொள்வத்ற்காக “போர்க்குற்றம் – இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள்” என்ற ஒரு பொது தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தின் வாயிலாக நாம் அனைவரும் கைகோர்த்து ஒரு நீதிக்கான போராட்டத்தை தொடங்க வேண்டியுள்ளது. அப்போராட்ட்த்தின் வாயிலாக இந்திய அரசு தொடர்ந்து இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படுவதை தடுத்து நிறுத்தி, சிங்கள பேரினவாத இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரனையை நட்த்த வலியுறுத்த வைக்க வேண்டும். அது நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்தால் தான் முடியும். நாம் அனைவரும் கைகோர்த்து நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்ப்பது மட்டுமல்லாது; நடக்கப்போகும் இனப்படுகொலைகளையும் தடுத்து நிறுத்துவோம்
இதன் தொடர்ச்சியாக கையெழுத்து இயக்கம் மும்பையிலும் தொடங்கபட்டது ..தமிழர்கள் பெருவாரிய வசிக்கும் பகுதிகளளில் கையெழுத்து வாங்கபட்டது..அதோடு மும்பையில் சமுக ஆர்வலர்களிடம் வாங்கபட்டது ..

முதலாவதாக முன்னால் நீதிபதி ஹோசபர்ட் சுரேஷ் கையொப்பமிட்டார்..

மனித உரிமை போராளி ,பெண் பத்திரிகையாளர் தீஸ்த்த செடல்வாத் கையொப்பமிட்டார்..

மனித உரிமை ஆர்வலர் ஆனந்த் டெல்டும்ப்டே கையொப்பமிட்டார்..மேலும் பல சமுக ஆர்வலர்களிடம் கையொப்பம் வாங்கும் பணி நடக்கிறது ..இதில் பெரியார் திராவிடர் கழக மா.கதிரவன் ,உலக தமிழர் பேரமைப்பு நாடோடி தமிழன் ,பிவாண்டி பாலா ,இறை .ச. ராஜேந்திரன் ஆகியோர் ஈடுப்பட்டுவருகிறர்கள்..மேலும் செய்திகளோடு விரைவில் உங்களிடையே ..
சமீபத்தில் கருத்துரைத்தவர்கள்